சுகாதார நடைமுறைகள், விதிகளை மீறினால் சந்தையை மூடுவேன் - நல்லூர் பிரதேச சபை தவிசாளர் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 1, 2020

சுகாதார நடைமுறைகள், விதிகளை மீறினால் சந்தையை மூடுவேன் - நல்லூர் பிரதேச சபை தவிசாளர்

சுகாதார நடைமுறைகள், விதிகளை பின்பற்றாமல் அசண்டையீனமாக நடந்து கொண்டால் சந்தைகளை மூட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் த. தியாக மூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , “யாழில் உள்ள பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தை மற்றும் கொக்குவில் சந்தை ஆகியன நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்டது.

குறித்த சந்தைகளுக்கு தினமும் பெருமளவான மக்கள் வந்து செல்கின்றனர். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனோ தொற்று அபாயத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக எமது ஆளுகைக்கு உட்பட்ட சந்தைகளில் வியாபர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் சந்தைக்கு வரும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளையும் விதிகளையும் பின்பற்றுமாறு கோரி வருவதுடன் எமது சபையின் உத்தியோகத்தர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இருந்த போதிலும் பெருமளவான வியாபரிகள், பொதுமக்கள் சுகாதார நடைமுறைகள் விதிகளை மீறி செயற்படுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று உள்ளன.

தொடர்ந்து இவ்வாறான செயற்பாடுகளில் வியாபாரிகள், பொதுமக்கள் ஈடுபட்டால் எமது ஆளுகைக்குள் உள்ள திருநெல்வேலி சந்தை மற்றும் கொக்குவில் சந்தை என்பவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்போம்” என தெரிவித்தார்.

No comments:

Post a Comment