போர்த்துக்கல் நாட்டில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்தார் பிரதமர் அண்டோனியோ கோஸ்டா - News View

About Us

About Us

Breaking

Sunday, November 1, 2020

போர்த்துக்கல் நாட்டில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்தார் பிரதமர் அண்டோனியோ கோஸ்டா

போர்த்துக்கல் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றின் 2ஆவது அலை தற்போது பல்வேறு ஐரோப்பிய நாடுகளை தாக்கியுள்ளது. பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை தினமும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. 

இங்கிலாந்தில் டிசம்பர் 2ஆம் திகதி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் 2ஆவது முறையாக முழு ஊரடங்கை அமுல்படுத்தத் தொடங்கியுள்ளன.

இதற்கிடையே, தென் ஐரோப்பாவில் உள்ள போர்த்துக்கல் நாட்டிலும் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் அங்கு 4,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில், போர்த்துக்கலில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் அண்டோனியோ கோஸ்டா கூறியதாவது தற்போது கொரோனா வைரசின் 2ஆவது அலை வீசி வருகிறது. போர்த்துக்கலில் கொரோனா அதிகளவில் பரவுவதை தடுக்க புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

நவம்பர் 4ஆம் திகதி முதல் பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்காகவும் பொதுமக்கள் வெளியில் வரக்கூடாது.

அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் 121 மாநகராட்சிகளில் ஊரடங்கு மிக தீவிரமாக அமுல்படுத்தப்படும். 

நாட்டின் 70 சதவீத மக்கள் தற்போது பாதிப்பு அதிகமாகி இருக்கும் பகுதிகளில் இருப்பதால், ஊரடங்கு விதிகளை கடுமையாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment