மாணவன் மீது துப்பாக்கி பிரயோகம், வைத்தியர் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, November 23, 2020

மாணவன் மீது துப்பாக்கி பிரயோகம், வைத்தியர் கைது

பன்னிபிட்டிய பகுதியில் பாடசாலை மாணவன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 46 வயதுடைய வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

சம்பவத்தில் 17 வயதுடைய மாணவன் ஒருவனின் நெஞ்சுப்பகுதியில் தோட்டா பாய்ந்து காயமடைந்த நிலையில் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் அவரிடமிருந்து துப்பாக்கியை மீட்டுள்ளதுடன், இன்றைய தினம் அவரை நுகேகொட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்தனர். 

பாடசாலை மைதானத்தில் குறித்த சிறுவன் நேற்றைய தினம் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பந்து வைத்தியரின் வீட்டு வளாகத்திற்குள் வீழ்ந்துள்ளது. பந்தினை சிறுவன் எடுக்க முயன்றபோதே இருவருக்கிடையில் வாக்குவதம் ஏற்பட்டதையடுத்து இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment