ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்களை விற்ற நபர் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 4, 2020

ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்களை விற்ற நபர் கைது

ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரத்தை 12 ஆயிரம் ரூபாவிற்கு விற்ற சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனியார் வாடகைக்கார் சேவை வழங்குநருக்கு வழங்கப்பட்ட ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் மூன்றை விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் பண்டாரகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மேற்படி நபர் மூன்று ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்களை 12 ஆயிரம் ரூபாவிற்கு விற்றதாக பொலிஸ் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment