கிளிநொச்சி மாவட்டத்தில் இரு வேறு பகுதிகளைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றைய தினம் திருவையாறு பகுதியில் உயிரிழந்த ஒருவரின் இறுதிக் கிரியைக்காக கொழும்பு ஆட்டுப்பட்டித் தெரு பகுதியில் இருந்து அவருடைய மகள் வருகை தந்திருந்தார்.
அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கண்டாவளை பகுதியில் வீதி அமைப்பு வேலைக்காக வருகை தந்து தற்போது தனிமைப்படுத்தலில் இருக்கும் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
No comments:
Post a Comment