நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக் காரணமாக, சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது பயணிக்கும் பேருந்துகளை சுற்றிவளைக்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றிலிருந்து, நாட்டையும், நாட்டு மக்களின் பாதுகாப்பையும் உறுதிபடுத்துவது, குறித்து பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கடந்த வாரமளவிலேயே தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பகுதிகளுடான பொதுப் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.
இந்நிலையில், சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது பயணிக்கும் பேருந்துகளை சுற்றிவளைக்கும் வேலைத்திட்டமானது, அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது பயணித்த 5 பேருந்துகளுடைய அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment