ஹட்டன் நகருக்கு வருகை தந்த பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடிய குற்றச்சாட்டில் ஒருவரை இன்று (05) ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண் கடந்த இரண்டாம் திகதி ஹட்டன் நகருக்கு வந்துவிட்டு, ஹட்டன் மென்டிஸ் மாவத்தை ஊடாக வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த வேளையில் அவரது தங்கச் சங்கிலியை அடையாளம் தெரியாத நபரொருவர் அறுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.
இது தொடர்பில் குறித்த பெண், ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துவிட்டு டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்றையதினம் ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மஸ்கெலியா காட்மோர் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(நோர்ட்டன் பிரிட்ஜ் - எம். கிருஸ்ணா)
No comments:
Post a Comment