கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கும் வரை தொடர்ந்து தகனம் செய்யுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 கொரோனா தொற்றால் உயிரிழக்கின்றவர்களின் உடல்கள், அது தொடர்பான இறுதி பரிந்துரை கிடைக்கும் வரையில் தகனம் செய்வதைத் தொடருமாறு கொரோனா தொற்றால் உயிரிழக்கின்றவர்களின் உடல்கள் அடக்கம் செய்ய முடியுமா என ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட வேண்டுமா அல்லது அடக்கம் செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து இறுதி பரிந்துரைகளை வழங்க அது தொடர்பான அனைத்து உண்மைகளையும் பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்று குறித்த குழு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட வேண்டுமா அல்லது அடக்கம் செய்யப்பட வேண்டுமா என்பது குறித்த பரிந்துரைகளை வழங்க அரசாங்கத்தால் நிபுணர்களின் குழு நியமிக்கப்படுவது இதுவே முதல் தடவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment