பாராளுமன்றத்தில் ஒக்டோபரில் சிறப்பாகச் செயற்பட்ட 10 பேர் - News View

About Us

About Us

Breaking

Monday, November 23, 2020

பாராளுமன்றத்தில் ஒக்டோபரில் சிறப்பாகச் செயற்பட்ட 10 பேர்

பாராளுமன்றத்தில் ஒக்டோபர் மாதம் சிறப்பாகச் செயற்பட்ட 10 பாராளுமன்ற உறுப்பினர்களுள் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இரு பாராளுமன்ற உறுப்பினர் இடம்பிடித்துள்ளனர்.

அந்த வகையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் 7 ஆவது இடத்தில் உள்ளார்.

அதேபோன்று கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் 10 ஆவது  இடத்தில் உள்ளார்.

பாராளுமன்றம் வருகை, விவாதங்களில் பங்கேற்பு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே manthri.lk எனும் இணையத்தால் குறித்த பட்டியல் தயாரிக்கப்படுகின்றது.

முதல் பத்து இடங்களைப் பிடித்த பாராளுமன்ற உறுப்பினர்கள்
1. அநுரகுமார திஸாநாயக்க
2. அஜித் நிவாட் கப்ரால்
3. சஜித் பிரேமதாஸ
4. ஹர்ஷ டி சில்வா
5. மஹிந்தானந்த அளுத்கமகே
6. பந்துல குணவர்தன
7. வேலு குமார்
8. புத்திக்க பத்திரண
9. எஸ். சேமசிங்க
10. எஸ்.எம். மரிக்கார்

No comments:

Post a Comment