வீடுகளில் இடம்பெறும் மரணங்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை இடம்பெறுமா? - விபரிக்கிறார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் - News View

About Us

About Us

Breaking

Monday, November 16, 2020

வீடுகளில் இடம்பெறும் மரணங்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை இடம்பெறுமா? - விபரிக்கிறார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

வீட்டினுள் உயிரிழக்கும் எந்தவொரு நபரின் சடலமும் மரணப் பரிசோதகரின் அல்லது நீதவானின் பரிந்துரையின் பேரில் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானம், கொவிட் அவதானம் நிறைந்த பிரதேசங்களைப் போன்று அவதானம் இல்லாத பிரதேசங்களுக்கும் பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீடொன்றில் மரணமொன்று சம்பவிக்கும் போது, சுகாதாரப் பிரிவு மற்றும் கிராம உத்தியோகத்தரின் அனுமதியுடன் சடலம் தொடர்பிலான இறுதிச் சடங்குகளை நடாத்துதல் அல்லது வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற பின்னர் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் சடலம் தொடர்பிலான இறுதிக் சடங்குகளை மேற்கொள்ளல் பொதுவாக இடம்பெறும். 

எவ்வாறாயினும், இத்தினங்களில் வீடுகளில் உயிரிழக்கும் நபர் கொவிட் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்படும் வரை, சடலம் தொடர்பில் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள முடியாது. 

சடலம் மீது பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வதா? இல்லையா? என்பது பிரதேசத்திற்குப் பொறுப்பான மரணப் பரிசோதகர் அல்லது நீதவானின் பரிந்துரைக்கு அமைய இடம்பெறும். 

இதற்கு மேலதிகமாக, கொவிட் தொற்று அவதானம் அதிகமாகக் காணப்படும் கொழும்பை அண்மித்த வைத்தியசாலைகளுக்குக் கொண்டு வரும் வழியில் உயிரிழக்கும் அல்லது கொலை, தற்கொலை போன்ற இயற்கைக்கு மாறான மரணம் ஏற்பட்டபோது, கொவிட் சந்தேகம் காணப்பட்டால் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.ஏ. காதிர் கான் 

No comments:

Post a Comment