பண்டாரகம, அக்குரணையில் சில கிராம பிரிவுகள் முடக்கம் - கிரிமன்துடாவ பிரிவு விடுவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 25, 2020

பண்டாரகம, அக்குரணையில் சில கிராம பிரிவுகள் முடக்கம் - கிரிமன்துடாவ பிரிவு விடுவிப்பு

இலங்கையில் மேலும் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று பண்டாரகம பொலிஸ் பிரிவில் கிரிமன்துடாவ கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கொவிட்-19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பண்டாரகம பொலிஸ் பிரிவில் கிரிமன்துடாவ கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக கொவிட்-19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று பின்வரும் பிரதேசங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இத்தருணத்தில் இருந்து தனிமைப்படுத்தல் பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ளன.

01. பண்டாரகம பொலிஸ் பிரிவு

• அடலுகம கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

• எபிடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு

• கொலமெதிரிய கிராம உத்தியோகத்தர் பிரிவு

02. கண்டி மாவட்டத்தில் அலவதுகொட பொலிஸ் பிரிவு (அக்குரணை பிரதேச செயலக பிரிவு)

• புளுகஹாதென்ன கிராம உத்தியோகத்தர் பிரிவு

• தெலம்புகஹாவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு

No comments:

Post a Comment