நீங்கள் எனக்கு வாக்களித்தாலும், வாக்களிக்கவில்லை என்றாலும் அமெரிக்கர்கள் அனைவருக்குமான ஜனாதிபதியாக இருப்பேன் என ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 3ம் திகதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான ட்ரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் போட்டியிட்டார்.
அமெரிக்க தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் 270 தேர்தல் சபை வாக்குகளை பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாக முடியும்.
இதையடுத்து, பெரும்பான்மைக்கு 270 தேர்தல் சபை வாக்குகள் தேவையாக உள்ள நிலையில், ஜோ பைடன் 273 தேர்தல் சபை வாக்குகளை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிர்வாகியுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தனது வெற்றி குறித்து ட்விட்டரில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘அமெரிக்கா, நமது மிகச் சிறந்த நாட்டை வழிநடத்த நீங்கள் என்னை தேர்ந்தெடுத்தற்காக நான் பெருமைப்படுகிறேன்.
நமது முன் கடினமான வேலைகள் உள்ளது. ஆனால், நான் உங்களிடம் வாக்குறுதி அளிக்கிறேன். நீங்கள் எனக்கு வாக்களித்தாலும், வாக்களிக்கவில்லை என்றாலும் நான் அமெரிக்கர்கள் அனைவருக்குமான ஜனாதிபதியாக இருப்பேன். நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்’ என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment