சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, November 14, 2020

சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகள் நாளை அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, களனி பொலிஸ் பிரிவு திங்கட்கிழமை 16 ஆம் திகதி அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில்
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு
ஜா-எல பொலிஸ் பிரிவு
ராகமை பொலிஸ் பிரிவு
கடவத்த பொலிஸ் பிரிவு
வத்தளை பொலிஸ் பிரிவு
பேலியகொடை பொலிஸ் பிரிவு
மற்றும் களனி பொலிஸ் பிரிவிலும் திங்கட்கிழமை (16) மு.ப.5.00 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் ஏனைய பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் நிலை நாளை (15) முற்பகல் 5.00 மணி முதல் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ள, பின்வரும் இடங்கள் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் நாளை மு.ப. 5.00 மணிக்கு தனிமைப்படுத்தல் நிலை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குருணாகல் மாவட்டத்தில்
குருணாகல் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள்
குளியாபிட்டி பொலிஸ் பிரிவு

களுத்துறை மாவட்டத்தில்
ஹொரணை பொலிஸ் பிரிவு
இங்கிரிய பொலிஸ் பிரிவு
வேகட மேற்கு கிராம சேவகர் பிரிவு

கேகாலை மாவட்டத்தில்
ருவன்வெல்ல பொலிஸ் பிரிவு
மாவனல்லை பொலிஸ் பிரிவு

No comments:

Post a Comment