நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில், அவிசாவளை மாவட்ட வைத்தியசாலையில் மருத்துவ அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அவிசாவளை மாவட்ட வைத்தியசாலையின் ஆரம்ப சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் மருத்துவ அதிகாரி ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த மருத்துவ அதிகாரி கழுஹக்கல - ஏகல பகுதியைச் சேர்ந்தவரென தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த வைத்தியசாலையின், ஆரம்ப சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment