வைரஸ் தொற்றில் சிக்கி மக்கள் அல்லோலப்படும் போது அதனை சுயநல அரசியலுக்காக பயன்படுத்துவது அநாகரீகமானது. மக்கள் துன்பங்களை அனுபவிக்கும் போது அவர்களுக்கு உதவ வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும். இந்த பொறுப்பிலிருந்து தப்பித்து விட அரசாங்கத்தால் இயலாது என முன்னாள் பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்னண் தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில், கொவிட்-19 வைரஸ் தொற்றில் சிக்கி மக்கள் அல்லோலப்படும் போது அதனை சுயநல அரசியலுக்காக பயன்படுத்துவது நாகரீகமான விடயமல்ல.
அமைச்சர் விமல் வீரவன்ச 5 ஆயிரம் ரூபாவால் ஒரு மாதம் வாழ்ந்து விடலாம், அத்தொகை போதுமானது என்ற கருத்துடன் பேசியது மிகவும் கவலையளிக்கிறது.
ஏனெனில் அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவ்வாறனதொருவர் மக்கள் துன்பங்களை உதாசீனம் செய்வது போல் பேசுவது ஏற்புடையதல்ல.
மக்கள் துன்பங்களை அனுபவிக்கும் போது அவர்களுக்கு உதவ வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும். அந்த பொறுப்பிலிருந்து சுயநல அரசியலை காரணம் காட்டி யாரும் தப்பித்து விட இயலாது.
No comments:
Post a Comment