ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் மட்டக்களப்பு கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 80 பேர் சிசிக்சை முடிவடைந்த நிலையில் அங்கிருந்து தமது வீடுகளுக்குச் சென்று விட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்வைத்தியசாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 107 பேர் மேல் மாகாண கொரோனா கொத்தணியின் மூலம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அதன்படி சிகிச்சை பெற்று வெளியேறியோர் தவிர தற்போது இந்த வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 17 பொதுமக்களும் 03 பொலிஸார் உட்பட 20 பேர் சிகிச்சை பெற்று வருவதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தார்.
No comments:
Post a Comment