2021 வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக, இணை அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இன்று காலை ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 1.40 மணிக்கு நாடாளுமன்றத்தில் பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ வரவு-செலவுத் திட்டத்தை சமர்பிக்கின்றார்.
இன்றைய வரவு செலவுத் திட்ட உரை இலங்கையின் 75 வது வரவு செலவுத் திட்ட அறிக்கையாக கருதப்படுகிறது.
நாளை தொடக்கம் 21 ஆம் திகதி வரை 4 நாட்கள் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 21 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதம் என்றழைக்கப்படுகின்ற மூன்றாவது வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 23 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை வரை 16 நாட்கள் நடைபெறவுள்ளது.
மூன்றாவது வாசிப்பு மீதான விவாதம் நிறைவில் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 5 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும் என்பது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment