நாட்டில் இதுவரை 107 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் துசார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.
இவ்வாறுற கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 90 பெண் கைதிகள் மற்றும் 17 ஆண் கைதிகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி பழைய போகம்பரை சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை ஆகிய இரண்டு சிறைச்சாலைகளிலே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment