நாட்டின் அனைத்து மிருகக்காட்சி சாலைகளும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலின் மத்தியில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு வன வள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (17) முதல் அனைத்து மிருக்காட்சி சாலைகளையும் மூடுமாறு பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். அதேபோல் மிருக்காட்சி சாலைகளினுள் நுழைவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment