கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஷிபானின் மாதம் ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் நிதியுதவி கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, October 12, 2020

கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஷிபானின் மாதம் ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் நிதியுதவி கையளிப்பு

நூருல் ஹுதா உமர்

கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி பி.எம். ஷிபான் அவர்களால் அவருடைய மாதாந்த சம்பளத்தைக் கொண்டு செயற்படுத்தப்பட்டுவரும் "மாதம் ஒரு வேலைத்திட்டம்" நிகழ்ச்சி நிரலின் கீழ் இம்முறை 'ஷம்ஸ் நண்பர்கள் வட்டம்-2004 சமூக சேவை அமைப்புக்காக' ஒக்டோபர் மாத நிதி கையளிப்பு இன்று மருதமுனையில் இடம்பெற்றது.

மருதமுனையை மையமாகக் கொண்டு கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பொதுச் சேவைகளை செய்துவருகின்ற 'ஷம்ஸ் நண்பர்கள் வட்டம்-2004 சமூக சேவை அமைப்பின் பொருளாளர் ஆர்.எம்.பஸால் அமூன், செயளாளர் ஏ.ஆர்.எம். கியாஸ், செயற்குழு உறுப்பினர் எம்.எம்.எம். சிபாம் உள்ளிட்டோரிடம் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சட்டத்தரணி பி.எம். ஷிபான் நிதியை கையளித்தார். 

கடந்த மாத "மாதம் ஒரு வேலைத்திட்டம்" நிகழ்ச்சி நிரலின் கீழ் மருதமுனை அல்- மினன் பாடசாலைக்கு நிலற்குடை அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment