இந்தியாவிலிருந்தோ வேறு நாடுகளிலிருந்தோ பணியாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் எவரும் இலங்கை வரவில்லை - அமைச்சர் விமல் வீரவன்ச - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 20, 2020

இந்தியாவிலிருந்தோ வேறு நாடுகளிலிருந்தோ பணியாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் எவரும் இலங்கை வரவில்லை - அமைச்சர் விமல் வீரவன்ச

கைத்தொழில் அமைச்சுக்குட்பட்ட எந்தவொரு தொழிற்சாலைகளுக்கும் இந்தியாவிலிருந்தோ அல்லது வேறெந்த நாடுகளிலிருந்தோ கொவிட் வைரஸ் தொற்றுக்கு பின்னர் பணியாளர்கள் அல்லது தொழில்நுட்பவியலாளர்கள் அழைக்கப்படவில்லை என்று கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆடை தொழிற்சாலை கொவிட் தொற்றுக்கு மத்தியில் பாரிய பிரச்சினையை எதிர்கொண்டிருப்பதாகவும் இந்தியாலிவிருந்து சிலர் வந்ததாகவும் கொரோனா தொற்று மீண்டும் பரவியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் துசாரா இந்துநில் வாய்மொழி மூலம் எழுப்பிய கோள்விக்கு அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு பதிலளித்தார்.

நாட்டிலுள்ள தொழிற்சாலைகளில் தொழில்நுட்ப அல்லது வேறெந்த பணிகளுக்காகவோ பணியாளர்கள் அழைக்கப்படுவார்களாயின் முதலீட்டு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள தொழில்சாலை முதலீட்டு சபையின் அனுமதியையும் அப்படியில்லையாயின் கைத்தொழில் தொழிற்சாலைக்கான கைத்தொழில் அமைச்சின் அனுமதியையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் விளக்கமளித்தார்.

பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை முதலீட்டு சபையில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமாகும். அது கைத்தொழில் அமைச்சு விடயதானத்துக்கு உட்பட்டதில்லை எனுவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நிறுவனத்துக்கு இந்தியாலிருந்து சிலர் வந்ததாக சொல்லப்படும் விடயம் தொடர்பில் தாம் தனிப்பட்ட முறையில் கண்டறிந்தாகவும் குறிப்பிட்ட அமைச்சர். கொவிட்-19 தொற்றுக்கு பின்னர் இந்திய பணியாளர்கள் என்ற ரீதியிலோ அல்லது தொழில்நுட்பவியளாளர்கள் என்ற ரீதியிலோ எந்தவொரு தொழிற்சாலைக்கும் இலங்கைக்கு அழைத்து வருவதற்காக கோரிக்கை முன்வைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார். அதற்காக எந்த வித அனுமதியும் வழங்கப்படவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

முதலீட்டு சபைத்தலைவரிடம் இது தொடர்பாக தாம் கேட்டதாகவும் எந்தவொரு தொழில்நுட்பவியளாளர் அல்லது வேறு எந்த பணிகளுக்காக முதலீட்டு சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு வரவில்லை என முதலீட்டு சபை தலைவர் உறுதிப்படுத்தினார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தொடர்ந்நு அது தொடர்பாக நாம் கேட்டபோது குடிவரவு, குடியகழ்வு திணைக்களம் இதனை உறுதி செய்ததாகவும் கைத்தொழில் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment