பதுளை பிராந்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்பின் கீழ் பதுளை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு தலைமையிலான குழுவினால் இன்று ஹாலிஎல கலவுட பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 180 மில்லீ லீற்றர் கொள்ளளவுடைய 50 மதுபான போத்தல்களை கைப்பற்றியுள்ளனர்.
ஹாலிஎல கலவுட பிரதேசத்தில் கிராமிய உற்பத்தி பொருட்களான கித்துல்பாணி, கித்துல்கருப்பட்டி, மிளகு போன்ற பொருட்கள் விற்பனை செய்துவந்த வியாபாரியிடமிருந்தே இந்த மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது குறித்த வியாபாரி பதுளை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை பதுளை நீதிமன்ற நீதிவானிடம் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பதுளை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment