நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை (05) முதல் ஆரம்பமாகுவதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஏற்கனவே இரண்டாம் தவணை விடுமுறையை ஒக்டோபர் 09ஆம் திகதி வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆயினும், தற்போது நாட்டில் நிலவும் நிலைமையை கருத்திற்கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில், கம்பஹா மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகள், தனியார் பிரத்தியேக வகுப்புகளுக்கும் நாளை (05) திங்கட்கிழமை முதல் வௌ்ளிக்கிழமை (09) வரை ஒரு வாரம் பாடசாலைகள் மூடப்படும் என கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நாடு முழுவதும் இரண்டாம் தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை இறுக்கமான முறையில் கடைப்பிடிக்குமாறு, சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
No comments:
Post a Comment