சவுதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள பிரபல பள்ளிவாசலுக்குள் கார் ஒன்று அதிகவேகமாக பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சவுதி அரேபியாவின் மக்கா நகரில் பெரிய பள்ளிவாசலின் தெற்கு வாசலை சுற்றியுள்ள வீதியில் நேற்று நள்ளிரவு அதிவேகமாக வந்த கார் ஒன்று திடீரென பள்ளிவாசளுக்குள் பாய்ந்து நுழைவு வாயிலில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை.
சம்பவம் குறித்து தகவறிந்த பாதுகாப்பு அதிகாரிகள் பள்ளிவாசளுக்கு விரைந்ததாக மக்கா ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் சுல்தான் அல்-தோசாரி கூறினார்.
காரை மோதிய நபரை சவுதி அரேபியாவின் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
கைது செய்யப்பட்ட ஓட்டுநர் சவுதி நாட்டவர் என்றும் அவர் அசாதாரண நிலையில் இருந்ததாக அதிகாரிகள் கூறினார், மேலும் ஓட்டுநர் பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டார் என தெரிவித்தனர்.
No comments:
Post a Comment