கொரோனா வைரஸ் காரணமாக சுகாதார பிரிவின் ஆலோசனைக்கமைய சில நிறுவனங்களின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் ஜனாதிபதி செயலகத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக, பொதுமக்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தர முடியாததைக் கருத்திற்கொண்டு தொலைபேசி, தபால் சேவை, இணையத்தளம் ஊடாக மக்களுக்கு சேவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், வழங்கப்பட்டுள்ள தொலைபேசி மற்றும் Fax இலக்கங்களுடன் இணையத்தள முகவரி ஊடாக மக்கள் ஜனாதிபதி செயலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் சேவை பிரிவு, ஜனாதிபதி நிதியம் ஆகியவற்றுடன் தொடர்பினை ஏற்படுத்தத முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவினை தொடர்புகொள்வதற்கு 0114354550/ 0112354550 ஆகிய தொலைபேசி இலக்கங்களும் 011 2348855 எனும் Fax இலக்கமும், publicaffairs@presidentsoffice.lk எனும் இணையத்தள முகவரியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தவிர, குறைகேள் பிரிவிற்கு தொடர்பினை ஏற்படுத்துவதாயின், 0112338073 எனும் தொலைபேசி இலக்கமும் ombudsman@presidentsoffice.lk எனும் இணையத்தள முகவரியும் ஜனாதிபதி செயலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
0112354354 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாகவும் 011 2331243 எனும் Fax இலக்கத்தினூடாகவும், fundsecretary@presidentsoffice.lk எனும் இணையத்தள முகவரி ஊடாகவும் ஜனாதிபதி நிதியத்துடன் தொடர்பினை ஏற்படுத்த முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment