ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலிருந்து முஷாரப் வெளியேற்றப்பட்டார்! - News View

About Us

About Us

Breaking

Friday, October 23, 2020

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலிருந்து முஷாரப் வெளியேற்றப்பட்டார்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலிருந்து, ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப்பும் கலந்துகொண்டார்.

எனினும், ’20’ ஆவது திருத்தச்சட்ட மூலத்தில் இருந்த இரட்டைக் குடியுரிமை சரத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஷாரப்பை வெளியேற்ற வேண்டும் என மரிக்கார் வலியுறுத்தினார். இதற்கு ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்கினர்.

இதனையடுத்தே ரிஷாட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் வெளியேற்றப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment