கடந்த செப்டெம்பர் முதலாம் திகதி முதல் 30ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 65,620 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருள், ஆயுதங்கள், வெடி பொருள், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 12,883 பேரும், ஏனைய குற்றங்களை இழைத்த குற்றச் சாட்டுகளில் 25,644 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஹெரோயின் வைத்திருந்த குற்றச் சாட்டில் 8,707 பேரும், கஞ்சா வைத்திருந்த குற்றச் சாட்டில் 6,349 பேரும், ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச் சாட்டில் 456 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச் சாட்டில் 273 பேரும், வெடி பொருள் வைத்திருந்த குற்றச் சாட்டில் 16 பேரும், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச் சாட்டில் 10,842 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சுற்றிவளைப்புகளின்போது ரி 56 வகை துப்பாக்கிகள் 6 உம், கைத்துப்பாக்கிகள் 7 உம், ரிவோல்வர் வகை துப்பாக்கிகள் 7 உம், ரிபீட்டர் வகை துப்பாக்கி 1 உம், உள்நாட்டு துப்பாக்கிகள் 233 உம், 12 துளை கொண்ட துப்பாக்கிகள் 69 உம், நாட்டுத் துப்பாக்கிகள் 9 உம், தோட்டாக்கள் 644 உம், வாள்கள் 9 உம், கத்திகள் 2 உம் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்தோடு, இந்நடவடிக்கைகளின்போது வெடி பொருள் 339 கிராமும், டெட்டனேட்டர்கள் 133 உம், கைக்குண்டுகள் 40 உம் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்டவிரோத மதுபானம் 131,233 லீற்றர் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment