இலங்கைக்கு கடத்த இருந்த 500 கிலோ சமையல் மஞ்சள் மூட்டைகள் பறிமுதல் - கடத்தல்காரர்களை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Monday, October 12, 2020

இலங்கைக்கு கடத்த இருந்த 500 கிலோ சமையல் மஞ்சள் மூட்டைகள் பறிமுதல் - கடத்தல்காரர்களை தேடும் நடவடிக்கையில் பொலிஸார்

மண்டபம் அருகே உள்ள முயல் தீவில் இருந்து இலங்கைக்கு கள்ளத் தோணியில் கடத்த இருந்த 500 கிலோ சமையல் மஞ்சள் மூட்டைகளை இந்திய கடலோர பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இது தொடர்பான கடத்தல்காரர்களை பொலிஸார் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள முயல் தீவில் இருந்து இலங்கைக்கு சமையல் மஞ்சள் கடத்த இருப்பதாக மண்டபம் கடலோர பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கடலோர பொலிஸார் ரோந்து படகில் குழுக்களாக பிரிந்து மன்னார் வளைகுடா கடற்பகுதியில் உள்ள தீவுகளில் ரோந்து மேற்கொண்டனர்.

அப்போது முயல் தீவில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சாக்கு மூட்டைகள் மணலில் புதைத்து வைக்கபட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக மண்னை தோண்டி பார்த்த போது அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக மண்ணுக்கு அடியில் புதைக்கபட்டிருந்த 12 மூட்டைகளில் சமையல் மஞ்சள் இருந்தது தெரியவந்ததை அடுத்தது மஞ்சள் மூட்டைகளை கைபற்றிய கடலோர பொலிஸார் மண்டபத்தில் உள்ள கடலோர காவல் படை முகாமிற்க்கு எடுத்த வந்தனர்.

கைப்பற்றப்ட்ட மூட்டைகளில் சுமார் 506 கிலோ சமையல் மஞ்சள் இருந்துள்ளது.

இந்த கடத்தல் மஞ்சளை தமிழக்ததில் இருந்து கடத்தி செல்ல இலங்கையை சேர்ந்த நபர்கள் யாரும் தீவு பகுதியில் மறைந்துள்ளனரா அல்லது தமிழகத்தை சேர்ந்த கடத்தல்காரர்கள் கடலோர பொலிஸார் தீவுக்குள் வருவதை கண்டதும் தீவுகளில் மறைந்துள்ளனரா என்பது குறித்து கரை ஓரங்களிலும் தீவு பகுதிகளிலும் கடலோர பொலிஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் குறித்து வேதாளை, தனுஷ்கோடி, மரைக்காயர்பட்டிணம் மற்றும் கீழக்கரைப் பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திய கடலோர பொலிஸார் விசாரணைக்கு பின் மஞ்சள் மூட்டைகளை ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

திருகோணமலை நிருபர் கீத்

No comments:

Post a Comment