கொரோனா வைரசுக்கான 2வது தடுப்பூசியையும் உருவாக்கி விட்டோம் - அதிரவைக்கும் ரஷியா - News View

About Us

About Us

Breaking

Thursday, October 15, 2020

கொரோனா வைரசுக்கான 2வது தடுப்பூசியையும் உருவாக்கி விட்டோம் - அதிரவைக்கும் ரஷியா

கொரோனா வைரசுக்கு எதிராக 3வது தடுப்பூசியையும் கூடிய விரைவில் உருவாக்கி விடுவோம் என ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு உலக நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் பல நாடுகள் கணிசமான வெற்றியையும் பெற்று தடுப்பூசி தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி உலகிலேயே முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்து விட்டதாக ரஷியா ஜனாதிபதி புதின் அதிரடியாக அறிவித்தார்.

’ஸ்புட்னிக் 5’ என பெயரிடப்பட்டுள்ள அந்த தடுப்பூசி தற்போது ரஷியாவில் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் இந்த ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசியை பரிசோதனை செய்துவருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக இரண்டாவது தடுப்பூசியையும் உருவாக்கிவிட்டதாக ரஷிய ஜனாதிபதி அதிரடியாக தெரிவித்துள்ளார். 

எபிவேக்கொரோனா என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி சைபீரியாவில் உள்ள வெக்டர் இன்ஸ்டிடியூட் என்ற மருந்து நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி தற்போது அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் இன்னும் தொடங்கவில்லை. மேலும், முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்த போதும் அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை. 

இந்த தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனை நவம்பர் மாதம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தடுப்பூசி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுவிட்டதால் 3ம் கட்ட பரிசோதனை முழுமையடைவதற்கு முன்னதாகவே எபிவேக்கொரோனா மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், இந்த தடுப்பூசி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ரஷிய ஜனாதிபதி புதின், செயின் பீட்டர்ஸ்பர்கை சேர்ந்த சுவ்மகோவ் நிறுவனத்தின் மேலும் ஒரு தடுப்பூசி இறுதிக்கட்ட பரிசோதானையில் உள்ளதாகவும், கூடிய விரைவில் கொரோனாவுக்கான 3வது தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்தார்.

’ஸ்புட்னிக் 5' தடுப்பூசியை தொடர்ந்து மேலும் ஒரு கொரோனா தடுப்பூசியை உருவாக்கிவிட்டதாகவும் 3வது தடுப்பூசியை விரைவில் உருவாக்கி விடுமோம் என ரஷியா அதிரடியாக தெரிவித்துள்ள நிகழ்வு உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment