முச்சக்கர வண்டி சாரதி கொலை - கொலையாளி 12 வருடங்களின் பின் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, October 12, 2020

முச்சக்கர வண்டி சாரதி கொலை - கொலையாளி 12 வருடங்களின் பின் கைது

மாலபே பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி சாரதியொருவரின் கொலையுடன் தொடர்புடைய கொலையாளி தேடப்பட்டு வந்த நிலையில், 12 வருடங்களின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தலங்கம பொலிஸார் தலாஹேன மயான பூமிக்கருகில் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒரு முச்சக்கர வண்டி சாரதி என பொலிஸார் குறிப்பிட்டனர். 

2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி மாலபே பகுதியில் வைத்து முச்சக்கர வண்டி சாரதியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டதுடன் சந்தேக நபர் தப்பிச் சென்றிருந்தார். 

தெஹியத்தகண்டிய பகுதியைச் சேர்ந்த ஜாகொட கமகே உதய ரத்நாயக்க எனப்படும் தம்மிக்க எனும் 24 வயதான முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரே 12 வருடங்களின் பின் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment