களுத்துறையின் சில பிரதேசங்களில் 24 மணித்தியால நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இன்று (09) நள்ளிரவு 12.00 மணி முதல் நாளை (10) நள்ளிரவு 12.00 மணி வரை குறித்த நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கமைய வாதுவை, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, மொல்லிகொட, மொரொந்துடுவ, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, நாகொட ஆகிய பிரதேசங்களில் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment