அனுமதி பத்திரமின்றி கொண்டு செல்லப்பட்ட மதுபான போத்தல்களுடன் இருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, September 12, 2020

அனுமதி பத்திரமின்றி கொண்டு செல்லப்பட்ட மதுபான போத்தல்களுடன் இருவர் கைது

அனுமதி பத்திரமின்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி மதுபான போத்தல்களுடன்  இருவர் கைது | Virakesari.lk
அனுமதிப்பத்திரம் இன்றி கொழும்பில் இருந்து மன்னாருக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி மதுபான பொருட்கள் நேற்று சனிக்கிழமை (12) மாலை மன்னார் பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். 

மன்னார் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல்களுக்கு அமைவாக, மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சியின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் மன்னார் பொலிஸ் நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து குறித்த மதுபான பொருட்களை கைப்பற்றியுள்ளனர். 

அனுமதிப்பத்திரம் இன்றி கொழும்பில் இருந்து மன்னார் முருங்கன் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மன்னார் சௌத்பார் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட போதே நேற்று சனிக்கிழமை (12) மாலை மன்னார் தள்ளாடி சந்தியில் வைத்து பொலிஸார் கைப்பற்றி உள்ளனர். 

பார ஊர்தி ஒன்றினுள் முழுமையாக சுற்றி பியர் போத்தல்கள் அடுக்கி வைத்து சூட்சுமமான முறையில் அனுமதிப் பத்திரமின்றி 750 மில்லி லீட்டர் கொண்ட 660 மதுபான போத்தல்கள் கொண்டு சென்ற போதே மன்னார் தள்ளாடி சந்தியில் வைத்து பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, அனுராதபுரத்தைச் சேர்ந்த 29 மற்றும் 39 வயதுடைய இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதோடு, பாரஊர்தி மற்றும் கைப்பற்றப்பட்ட சட்ட விரோத மதுபான போத்தல்களையும் மீட்டுள்ளனர். 

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment