புதிய அரசியலமைப்பு குறித்து சுமந்திரனிடம் பிரதமர் மஹிந்த கூறியது என்ன ? - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 23, 2020

புதிய அரசியலமைப்பு குறித்து சுமந்திரனிடம் பிரதமர் மஹிந்த கூறியது என்ன ?

(ஆர்.ராம்) 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்றுள்ளது. 

இதன்போது, புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் தொடர்பில் பரஸ்பர கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறிப்பாக, புதிய அரசியலமைப்பொன்று உருவாக்குவதாக இருந்தால், தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைக்கான தீர்வினையும் உள்ளடக்கியதாகவே அது அமைய வேண்டும் என்பதில் தான் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அனைவரும் அதீத கரிசனை கொண்டிருப்பதாக சுமந்திரன் எம்.பி. பிரதமரிடத்தில் கூறியுள்ளார். 

அதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ “புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதில் அதிக அக்கறை கொண்டிருக்கின்றோம். அத்துடன் புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பானது நிச்சயமாக தமிழர்களின் விடயங்களையும் உள்ளடக்கியதாகவே அமையும் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

இதேநேரம், புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகளில் தமிழ்த் தரப்பினது பங்களிப்பு தொடர்பிலும் தன்னிடமுள்ள எதிர்ப்புக்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுமந்திரன் எம்.பி.யிடத்தில் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment