கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கிடைத்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா முழுவதும் இலவசமாக விநியோகம் - டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, September 17, 2020

கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கிடைத்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா முழுவதும் இலவசமாக விநியோகம் - டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்டிஏ) அனுமதி அளித்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா முழுவதும் விநியோகம் செய்யப்பட்ட உள்ளது. மேலும், தடுப்பூசியை மக்கள் இலவசமாக செலுத்திக் கொள்ளல்லாம் என டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன.

பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. 

குறிப்பாக அமெரிக்கா கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நவம்பர் 3 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக தடுப்பூசியை கண்டுபிடித்து மக்களுக்கு வழங்க டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

இதற்காக பல தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளன. தேர்தலை கருத்தில் கொண்டு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தும் முயற்சியில் ஜனாதிபதி டிரம்ப் முயற்சி செய்து வருகிறார்.

இதற்கிடையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் தயாராகிவிடும் என டிரம்ப் நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். 

முன்னதாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் இடங்கள், தடுப்பூசியை சேமித்து வைக்கும் இடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என இம்மாத தொடக்கத்தில் அனைத்து மாகாணங்கள், நகரங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது பரிசோதனை நிலையில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகமான (எஃப்டிஏ) அனுமதி அளித்த உடன் தடுப்பூசி விநியோகம் விரைவாக செய்யப்படும் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தடுப்பூசிக்கு மக்களிடம் இருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும், மக்கள் இலவசமாக தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள துறையின் மூத்த அதிகாரியான பால் ஒஸ்டோஸ்கி கூறுகையில், ’கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கிடைத்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா முழுவதும் விநியோகம் செய்யவுள்ளோம்’ என்றார்.

No comments:

Post a Comment