லொரியில் எடுத்துச் செல்லப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் 217 பேர் படுகாயம் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 5, 2020

லொரியில் எடுத்துச் செல்லப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் 217 பேர் படுகாயம்

ஈரானில் லாரியில் எடுத்துச்செல்லப்பட்ட கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து 217 பேர் படுகாயம்
ஈரானில் லொரியில் எடுத்துச் செல்லப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த விபத்தில் படுகாயமடைந்த 217 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரானின் மேற்கு பகுதியில் உள்ள இலம் மாகாணத்தில் இருந்து குளோரின் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு ஈராக்குக்கு கென்டெய்னர் லொரி ஒன்று புறப்பட்டது.

இந்த லொரி நேற்று முன்தினம் இரவு இலம் மாகாணத்தில் உள்ள சஞ்ஜிரா என்ற கிராமத்துக்கு அருகே நின்று கொண்டிருந்த போது கென்டெய்னரில் இருந்த எரிவாயு சிலிண்டர்கள் திடீரென வெடித்துச் சிதறியது.

அடுத்தடுத்து எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியதில் கென்டெய்னர் லொரியில் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்ததில் அப்பகுதியில் கரும் புகை மண்டலம் உருவானது.

கென்டெய்னர் லொரி நிறுத்தப்பட்டிருந்த வீதியில் சென்று கொண்டிருந்த பலர் இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர். மேலும் சிலிண்டர்களில் இருந்து கசிந்த குளோரின் வாயு காற்றில் கலந்ததோடு, இதை சுவாசித்த மக்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.

தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் எரிவாயு கசிவால் சுவாச பிரச்சினைக்கு ஆளானவர்கள் என 217 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

லொரி சாரதியின் அலட்சியத்தால் அந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. எனவே பொலிசார் லொரி சாரதியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment