18,900 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 8, 2020

18,900 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது

மோதறையில் 18,900 போதை மாத்திரைகள் கொண்ட 189 பெட்டிகளுடன் மூவர், மோதறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மோதறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, நேற்று (07) மாலை மோதறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகலகம வீதியில் வைத்து போதை மாத்திரைகளுடன் இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி போதை மாத்திரைகளை சிறிய லொறியொன்றில் கொண்டு சென்றபோதே, இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரத்மலானை, தெரணியகல, வெல்லம்பிட்டி பிரதேசங்களைச் சேர்ந்த சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இன்று (08) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மோதறை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment