இலங்கையில் தென்னாபிரிக்க பெண் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 12, 2020

இலங்கையில் தென்னாபிரிக்க பெண் கைது

வீசா காலாவதியான நிலையில், இலங்கையில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த தென்னாபிரிக்க பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (11) கல்கிஸ்ஸை, பரம தம்ம சேதிய பிரதேசத்தில் வைத்து இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (12) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment