நோட்டன் பிரிட்ஜ் தியகல கல்கோரி பகுதியில் உள்ள வனப்பகுதியில் மான் குட்டி ஒன்று காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த மானைக் கண்ட அப்பகுதி மக்கள், நல்லதண்ணி வனத்துறையினருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, அப்பகுதிக்குச் சென்ற வனத்துறை அதிகாரி அந்த மான் குட்டியை மீட்டெடுத்து அதற்கு சிகிச்சை அளிக்கும் முகமாக நல்லதண்ணி வனப்பகுதியில் உள்ள அவர்களது பாதுகாப்பு அறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அந்த மானின் கழுத்து பகுதி முறிந்துள்ளதாகவும் அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார். உயரமான இடமொன்றிலிருந்து வீழ்ந்ததால், குறித்த மானின் கழுத்துப் பகுதி முறிந்திருக்கலாம் என, அவர் தெரிவித்தார்.
(மஸ்கெலியா நிருபர் - செ.தி. பெருமாள்)
No comments:
Post a Comment