எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளின் விநியோகம் நாளைய தினத்திற்குள் (29) பூர்த்தி செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்ப்பதாக, தபால் திணைக்களத்தின் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.
பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம், இதுவரையில் சுமார் 95 வீதம் பூர்த்தியடைந்துள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
நாளைய தினத்திற்கு பின்னர், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் இருப்பார்களாயின், அவர்கள் தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என, தபால் மா அதிபர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment