சுமார் 10,000 இலங்கையர் வேலை இழப்பு - நிர்க்கதியானோரை அழைத்துவர நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 29, 2020

சுமார் 10,000 இலங்கையர் வேலை இழப்பு - நிர்க்கதியானோரை அழைத்துவர நடவடிக்கை

மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளிலுள்ள இலங்கையர்கள் சுமார் 10,000 பேர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளதாக, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர், ஊடகப் பேச்சாளர் மங்கல ரன்தெணிய தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்ட முடக்க நிலையை அடுத்து, பல்வேறு நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள் தங்களது தொழிலை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையே இதற்கான காரணமாகும்.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிர்க்கதியான நிலையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக, அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு வருவதற்காக சுமார் 40,000 இலங்கைத் தொழிலாளர்கள் விண்ணப்பித்துள்ளதாக, அவர் தெரிவித்தார். அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக, தேவையான வசதிகளை வழங்குவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முடிவு செய்துள்ளதாக, அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment