'இலங்கை அரசியலில் நாட்டையே இணைக்கின்ற Digital வெளியீடு' எனும் கருப்பொருளின் கீழ், டிஜிற்றல் வழி பிரசார நடவடிக்கையொன்றை அங்குரார்ப்பணம் செய்யவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை 4.00 மணிக்கு, அக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெறும் இந்நிகழ்வில், இலங்கையிலுள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளிலுமிருந்து 100 பேரை இணைத்து, இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, ஐக்கிய தேசிய கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அனைத்து சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் இந்நிகழ்வினை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஊடக அறிக்கை வருமாறு,
No comments:
Post a Comment