(இராஜதுரை ஹஷான்)
பொதுத் தேர்தல் எப்போது இடம்பெறும் என்பதை தற்போது உறுதியாக குறிப்பிட முடியாது. தேர்தல் ஆணைக்குழு குறிப்பிடும் தினத்தில் தேர்தலில் போட்டியிட தயாராகவே உள்ளோம். கட்சிக்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
ஜூன் மாதம் 20ம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பத்தில் குறிப்பிட்டது. ஆனால் தற்போது பொதுத் தேர்தல் தொடர்பில் இம்மாதம் 25ம் திகதிக்கு பின்னரே அறிவிக்க முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
ஆகவே பொதுத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தினால் எவ்வித முன்கூட்டிய யூகங்களையும், நிலைப்பாட்டினையும் தற்போதைய நிலையில் குறிப்பிட முடியாது.
கொரோனா வைரஸ் பகுதியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதே தவிர முழுமையாக இல்லாதொழிக்கப்படவில்லை. ஆகவே அரசாங்கம் சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினரது ஆலோசனைக்கு அமையவே செயற்படும்.
தேர்தல்கள் ஆணைக்குழு சுகாதார சேவையினரது அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றியே தேர்தல் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும். பொதுத் தேர்தல் எப்போது இடம்பெற்றாலும் போட்டியிட ஆளும் தரப்பினர் தயாராகவே உள்ளோம். தேர்தலில் போட்டியிடவோ அல்லது கட்சிக்குள்ளோ எவ்வித முரண்பாடும் கிடையாது என்றார்.
No comments:
Post a Comment