முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க அரசாங்கத்துடன் இணையப்போகின்றார் என வெளியாகிய தகவல்களை அவர் நிராகரித்துள்ளார்.
விடயங்களை சரியாக புரிந்துகொள்ளாமல் போலியான தகவல்களை பரப்புவர்கள் தங்களின் தவறுகளை முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது குறித்து மாத்திரமே ஆர்வம் கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் போலியான தகவல்களை பரப்புபவர்கள் நாங்கள் என்ன செய்ய முயல்கின்றோம் என்பதை அறிந்து தங்களின் தவறுகளை சரிசெய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரண்டாவது சுற்று கொரோனா அபாயம் உள்ளதாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதால் முடக்கல் நிலையை தளர்த்துவதை அவதானமாக முன்னெடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரண்டாவது சுற்று ஆபத்தினை எதிர்கொண்டுள்ள சீனா தென் கொரியாவின் நிலைமையை அரசாங்கம் கருத்தில்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment