எகிப்தில் பொலிசார் நடத்திய அதிரடி தாக்குதலில் பயங்கரவாதிகள் 18 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Sunday, May 3, 2020

எகிப்தில் பொலிசார் நடத்திய அதிரடி தாக்குதலில் பயங்கரவாதிகள் 18 பேர் பலி

எகிப்து நாட்டில் பொலிசார் நடத்திய அதிரடி தாக்குதலில் 18 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆப்பிரிக்கா நாடுகளான எகிப்து நாட்டில் போகோ ஹராம், அல்கொய்தா, ஐ.எஸ் போன்ற பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்களை குறி வைத்து தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன. 

இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் பொலிசாரும், ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே மோதல் சம்வங்கள் நடைபெற்றுவருகிறது. 

இந்நிலையில், அந்நாட்டின் சினாய் மாகாணம் பிர் எல் அப்ட் நகரில் பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த தேடுதல் வேட்டையில் 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

No comments:

Post a Comment