எஸ்.எம்.எம்.முர்ஷித்
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் நிலைமை தொடர்பில் நாடளாவிய ரீதியில் முடக்கம் ஏற்பட்டுள்ளமையைக் கருத்திற் கொண்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் மூலம் நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரனின் தலைமையில் மயிலம்பாவெளி தன்னாமுனையில் பகுதியில் 15 பேருக்கும், மாவடிவேம்புப்பகுதியில் 21 பேருக்கும், கொக்குவில், சத்துருக்கொண்டான் பகுதியில் 10 பேருக்கும், ஊறணிப்பகுதியில் 10 பேருக்கும், ஏறாவூர் 04 பகுதியில் 15 பேருக்கும், செங்கலடி ரமேஸ்புரம், கணபதிநகர்ப் பகுதியில் 20 பேருக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
பேரவைத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரனின் மேற்கொண்ட முயற்சியினால், எதுவித உதவியுமின்றி அன்றாட உணவுக்காகச் சிரமப்பட்ட குடும்பங்களுக்கு இவை வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment