சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்ட மூவர் பிணையில் விடுதலை - மரங்கள், வாகனங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 29, 2020

சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்ட மூவர் பிணையில் விடுதலை - மரங்கள், வாகனங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவு

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை வன திணைக்களத்திற்குச் சொந்தமான குடும்பிமலைக் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரக்கடத்தலில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களை திங்கட்கிழமை மாவட்ட வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, ஒருவருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் மாவட்ட வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீல் உத்தரவிற்கமைய விடுதலை செய்யப்பட்டனர்.

வாழைச்சேனை வன இலாகா திணைக்களத்திற்குச் சொந்தமான குடும்பிமலைக் காட்டுப்பகுதியில் ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ள வேளையில், சட்டவிரோதமான முறையில் மரக்கடத்தில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களும், இரண்டு வாகனமும் மரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.

குடும்பிமலை இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் குடும்பிமலைக் காட்டுப்பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, ஒன்பது அடி நீளமுடைய எட்டு ஏழிலைப்பாலை மரங்களும், மூன்று சந்தேக நபர்கள் மற்றும் இரண்டு வாகனங்கள் என்பன வட்டார வன உத்தியோகத்தர்களின் சுற்றி வளைப்பில் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.

கடத்தப்பட்ட மரங்கள், மூன்று சந்தேக நபர்கள் மற்றும் வாகனங்கள் என்பவற்றை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப் பட்டதற்கிணங்க ஒருவருக்கு தலா இரண்டு இலட்சம் சரீரப்பிணையில் விடுதலை செய்வதுடன், கடத்தப்பட்ட மரங்கள் பறிமுதல் செய்யுமாறும் ஊடரங்குச் சட்டத்தினை மீறி பயன்படுத்திய இரண்டு வாகனங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் மாவட்ட வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீல் உத்தரவிட்டுள்ளார்.

வாழைச்சேனை வட்டார வனப்பிரிவில் சட்டவிரோத மண்ணகழ்வு மற்றும் சட்டவிரோத மரம் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனைத்தடுப்பதற்கு தனது தலைமையில் வட்டார வன உத்தியோகத்தர்களும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment