திருட்டுச் சம்பவத்தால் வீதிகளுக்கு மின் விளக்குகள் பொறுத்தினார் பிரதேச சபை உறுப்பினர் கமலநேசன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 29, 2020

திருட்டுச் சம்பவத்தால் வீதிகளுக்கு மின் விளக்குகள் பொறுத்தினார் பிரதேச சபை உறுப்பினர் கமலநேசன்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள கால வேளையில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்று வருவதால் மக்களின் பாதுகாப்பு கருதி வாழைச்சேனை பகுதி வீதிகளில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றனர்.

வாழைச்சேனை, கோறளைப்பற்று, பிரதேச சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமன க.கமலநேசனின் சொந்த நிதி மூலம் வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் காணப்படும் வீதிகளில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டது.

ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள கால வேளையில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்று வருவதனால் மக்கள் பாதுகாப்பு கருதி பிரதேச மக்களின் வேண்டுகோளின் பிரகாரம் குறித்த வீதிகளுக்கு மின் விளக்குகள் பொருத்தப்படதாக வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமன க.கமலநேசன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment