எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்டத்தின், ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலாளர் பிரிவில் சுய தனிமைப்படுத்தலில் இருக்கும் நபர்களுக்கு உலருணவு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் வழங்கப்பட்ட உலருணவுப் பொதிகள் தெரிவு செய்யப்பட்ட இருபத்தியைந்து நபர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் சுய தனிமைப்படுத்தலில் இருக்கும் நபர்களுக்கு வீடு வீடாகச்சென்று உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment