2021ம் ஆண்டிலும் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது சந்தேகமே ஜப்பான் பிரதமர் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 30, 2020

2021ம் ஆண்டிலும் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது சந்தேகமே ஜப்பான் பிரதமர்

2021ம் ஆண்டிலும் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது சந்தேகமே என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்து உள்ளார்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2016ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனி ரோவில் நடைபெற்றது.

இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24ம் திகதி முதல் ஆகஸ்ட் 9ம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. 2021ம் ஆண்டு ஜூலை 23ம் திகதி முதல் ஆகஸ்ட் 8ம் திகதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ் 2021 க்குள் கட்டுப்படுத்தப்படாவிட்டால் ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக டோக்கியோ ஒலிம்பிக் குழுத் தலைவர் யோஷிரோ மோரி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் 2021ம் ஆண்டிலும் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது சந்தேகமே என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்து உள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறியதாவது கொரோனா வைரஸ் தொற்று நோய் கட்டுப்படுத்தப்படாத வரை டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறாது. ஜப்பானில் அவசர நிலை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஒலிம்பிக் போட்டியை ஒரு ஆண்டுக்கு தள்ளி வைத்ததால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment