இரு பிள்ளைகளை கிணற்றில் வீசிய தந்தைக்கு விளக்கமறியல் - சடலங்கள் 18ஆம் திகதி வரை வைத்தியசாலையில் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 15, 2020

இரு பிள்ளைகளை கிணற்றில் வீசிய தந்தைக்கு விளக்கமறியல் - சடலங்கள் 18ஆம் திகதி வரை வைத்தியசாலையில்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவடிச்சேனை பகுதியில் தனது இரண்டு பிள்ளைகளை கிணற்றினுள் வீசி கொலை செய்த நபரை பதினான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீல் உத்தரவிட்டுள்ளார்.

மாவடிச்சேனை பாடசாலை வீதியில் வசிக்கும் அஸிமுல் ஹக் (வயது 10), அஸிமுல் தாஹியா (வயது 07) ஆகிய இரண்டு குழந்தைகளை செவ்வாய்கிழமை நள்ளிரவு தனது வீட்டு கிணற்றில் தூக்கி எறிந்ததில் பிள்ளைகள் மரணமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு பிள்ளைகளை கொலை செய்த குற்றத்தில் முகம்மது லெப்பை சுலைமா லெப்பை (வயது 46) என்ற பிள்ளைகளின் தந்தை கைது செய்யப்பட்டிருந்த நிலையில் வாழைச்சேனை பொலிஸாரால் நீதிமன்றத்தின் ஆஜர்ப்படுத்திய நிலையில் பதினான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்தோடு மரணமடைந்த இரண்டு குழந்தைகளின் சடலம் செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீலின் உத்தரவிற்கமைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரிக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகார விசேட விடுமுறையில் உள்ள நிலையில் எதிர்வரும் 18ம் திகதி சனிக்கிழமை சடலம் உறவினர்களிடம் வழங்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

No comments:

Post a Comment